அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவு: அன்னை மண்ணைப் பிரிந்து அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே எழாத வகையில் வாஞ்சையோடு என்னை அணைத்துக் கொள்ளும் நம் உறவுகள்! தங்களது உழைப்பாலும் – அறிவாலும் வாய்ப்புகளை அமைத்துக் கொண்டு அமெரிக்க நாட்டில் உயர்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு அன்பும் நன்றியும்! இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
The post அன்னை மண்ணைப் பிரிந்து அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.