இந்தநிலையில் சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தக் கூடாது என தொடர்ந்து லாரி உரிமையாளர்கள், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சுங்கக்கட்டணம் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்ட போதிலும் ஆம்னி பேருந்து கட்டணம் உயராது. வழக்கமான ஆம்னி பேருந்து கட்டணமே தொடரும் என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் உயர்த்தப்பட்டுள்ள டோல்கேட் கட்டணத்தை திரும்பப் பெறுமாறும் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
The post தமிழ்நாட்டில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்ந்தாலும், ஆம்னி பேருந்து கட்டணம் உயராது: ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.