தற்போது நடைபெற்று வரும் பணிகளை இன்னும் துரிதமாக மேற்கொள்ளவேண்டும் எனவும், உயர் அதிகாரிகள் தினந்தோறும் பணிகளின் நிலை குறித்து கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மழைக்கு முன்னதாகவே சென்னையில் மண்டலத்திற்கு ஒரு கண்காணிப்பு அதிகாரிகளை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன் சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து பணியாற்ற தன்னார்வலர்களை கண்டறிந்து தயார் படுத்தி வைக்கலாம் எனவும் இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இக்கூட்டத்தில், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள், நெடுஞ்சாலை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள், மற்றும் மும்பை , டெல்லியை சேர்ந்த அரசு அதிகாரிகளும் காணொளி மூலம் பங்கேற்றனர்.
The post வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயாராக இருக்க சென்னை மாநகராட்சிக்கு திருப்புகழ் ஆணையம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.