நெல்லையில் பட்டதாரி ஆசிரியர் இட மாறுதல் கலந்தாய்வு

தியாகராஜநகர், ஜூலை 24: நெல்லை மாவட்ட அளவில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டத்திற்கு மாறுதல் கலந்தாய்வு பாளையங்கோட்டை சாராள் தக்கர் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி கலந்தாய்வை நடத்தினார். மாவட்ட அளவில் 49 காலி இடங்கள் அறிவிக்கப்பட்டன. இதில் மாறுதல் பிரிவிற்காக 163 ஆசிரியர், ஆசிரியைகள் பங்கேற்றனர். அதிகபட்சமாக ஆங்கிலம் மற்றும் இயற்பியல் பாடப்பிரிவு ஆசிரியர்கள் தலா 25 பேர் மாறுதலுக்காக பங்கேற்றனர். தொடர்ந்து மாலை வரை கலந்தாய்வு நடத்தப்பட்டு மாறுதலுக்கு விருப்பம் தெரிவித்தவர்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

The post நெல்லையில் பட்டதாரி ஆசிரியர் இட மாறுதல் கலந்தாய்வு appeared first on Dinakaran.

Related Stories: