இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.அதில்,\\” ஆதார் தகவல்கள் பாதுகாப்பான முறையில் சேகரிக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்தும் வரை அதன் தகவல்களை ஒன்றிய அரசு கையாள்வதற்கு தடையோ அல்லது இடைக்காலமாக நிறுத்தி வைக்கவோ வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆதார் விவகாரத்தில் முன்னதாக உச்ச நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது. சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தேவைப்பட்டால் உயர்நீதிமன்றங்களை நாடி கோரிக்கை வைக்கலாம் என்று உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தார்.
The post ஆதார் தகவல்களை கையாள்வதற்கு ஒன்றிய அரசுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.