இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில் சங்க அவசர பொதுக்குழு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், பொருளாளர் ஜி.ராஜேஷ், நூலகர் வி.எம்.ரகு மற்றும் மூத்த, இளைய செயற்குழு உறுப்பினர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் 3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திங்கள் கிழமை (இன்று) நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இன்று உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
பெரும்பாலான நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. இதனால் நீதிமன்ற பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகன கிருஷ்ணன், செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், துணை தலைவர் அறிவழகன், பொருளாளர் ஜி.ராஜேஷ், நூலகர் ஜி.எம்.ரகு மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள் 3 சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி உயர்நீதிமன்ற ஆவின் கேட் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஒன்றிய அரசுக்கு எதிராக வழக்கறிஞர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி உயர்நீதிமன்றத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
The post 3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கங்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: உயர்நீதிமன்ற வழக்கு பணிகள் பாதிப்பு appeared first on Dinakaran.