கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் 10, 11ம் தேதி குடிநீர் விநியோகம் ரத்து

கும்பகோணம், ஜூலை 8: கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் 10, 11ம் தேதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் லெட்சுமணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கும்பகோணம் மாநகராட்சிக்கு சொந்தமான குடிதாங்கி தலைமை நீரேற்று நிலையம் மற்றும் மாநகர பகுதிகளில் குடிநீர் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் ஜூலை 10ம் தேதி மாலை மற்றும் 11ம் தேதி ஆகிய இரண்டு தினங்களுக்கு மாநகரில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் தங்களது பயன்பாட்டிற்கு தேவையான குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது என்று மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

 

The post கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் 10, 11ம் தேதி குடிநீர் விநியோகம் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: