அப்போது மனைவி லட்சுமியுடன் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராமமூர்த்தி, அருகில் கிடந்த கட்டையால் மனைவியை ஆவேசமாக தாக்கினார். அதன் பின்னரும் ஆத்திரம் அடங்காமல், அங்கிருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தினார். இதில், பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த லட்சுமியை, அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி உயிரிழந்தார். இதுகுறித்து மகாராஜகடை போலீசார் வழக்குப்பதிந்து, ராமமூர்த்தியை கைது செய்தனர்.
The post 63 வயது மனைவியை குத்தி கொன்ற 72 வயது கணவர் appeared first on Dinakaran.