வழக்கின் இறுதி கட்ட விசாரணை முடிந்து, புதுச்சேரி மாவட்ட தலைமை நீதிபதி சந்திரசேகரன் இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கினார். கொலை வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் குற்றம் சாட்டப்பட்ட மர்டர் மணிகண்டன் உள்பட 29 பேரை விடுவித்து தீர்ப்பு வழங்கினார். அதே சமயம் இவ்வழக்கில் தொடர்புடைய தேவேந்திரன், சமீபத்தில் கைது செய்யப்பட்டு அந்த வழக்கு தனியாக நடந்து வருகிறது. 5வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த தஞ்சாவூரை சேர்ந்த பிரேம் (41) என்பவருக்கு ஆயுதம் வைத்திருந்த குற்றத்துக்காக, 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மர்டர் மணிகண்டனின் 2வது மனைவி பத்மாவதி கடந்த ஏப்ரல் மாதம் புதுச்சேரியில் ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் புடைசூழ பிரமாண்ட பேரணி நடத்தி பாஜவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தகக்து. இரட்டை கொலை வழக்கில் பிரபல ரவுடி உள்பட 29 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பது புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post பாம் ரவி உள்பட இருவரை வெடிகுண்டு வீசி கொன்ற வழக்கு மர்டர் மணிகண்டன் உட்பட 29 பேர் விடுதலை: ஒருவருக்கு 7 ஆண்டு சிறை appeared first on Dinakaran.