இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை பிடித்த நிலையில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கர்னூல் இரண்டாவது நகர போலீசில் நேற்றுமுன்தினம் புகார் அளித்தனர். இதனையடுத்து மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்னாள் எம்எல்ஏ சுதாகரை போக்சோவில் கைது செய்தனர். இதனையடுத்து சுதாகரை கர்னூலில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீசார் ேநற்று கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். பின்னர் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு சுதாகரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் சுதாகரை மாவட்ட சிறைக்கு அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.
The post சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஜெகன் கட்சி மாஜி எம்எல்ஏ போக்சோவில் அதிரடி கைது appeared first on Dinakaran.