இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் சாக்ரடீஸ் புகார் செய்தார். போலீசாரின் அறிவுரைப்படி, சாக்ரடீஸ் லஞ்ச பணம் ரூ.1,500 பணத்துடன் நேற்று அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அலுவலக உதவியாளர் சிவசக்திவேலிடம் பணத்தை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த டிஎஸ்பி ஹேமசித்ரா மற்றும் இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் தலைமையில் போலீசார் பத்திரப்பதிவு அலுவலர் பிரகாஷ் மற்றும் அலுவலக தற்காலிக பணியாளர் சிவசக்திவேல் ஆகிய 2 பேரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
The post பத்திர பதிவு செய்ய ரூ.1,500 லஞ்சம் ஜெயங்கொண்டம் சார் பதிவாளர் கைது appeared first on Dinakaran.