ஜெகன் கட்சியில் இருந்து விலகல் தெலுங்குதேசம் கட்சிக்கு தாவினார் சித்தூர் மேயர்

சித்தூர்: ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் சந்திரபாபுநாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் கட்சி வெற்றி பெற்றதும், முன்னாள் முதல்வர் ஜெகன் கட்சியில் இருந்து பலர் அங்கு தாவி வருகிறார்கள். அந்த வரிசையில் சித்தூர் மேயர் அமுதா தற்போது தெலுங்குதேசம் கட்சியில் இணைந்துள்ளார். நேற்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தூர் மாநகராட்சி மேயர் அமுதா, துணை மேயர் சந்திரசேகர் உள்பட 25 கவுன்சிலர்கள் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் சித்தூர் எம்எல்ஏ குலஜாலா ஜெகன்மோகன் தலைமையில் அக்கட்சியில் இணைந்தனர்.

The post ஜெகன் கட்சியில் இருந்து விலகல் தெலுங்குதேசம் கட்சிக்கு தாவினார் சித்தூர் மேயர் appeared first on Dinakaran.

Related Stories: