இதற்காக, அவருக்கு ரூ.42 லட்சம் கொடுத்தேன். ஆனால், அவர் படத்தின் விஷூவல் பணிகளில் ஒரு பகுதியை மட்டுமே முடித்துள்ளார். அவரிடம் கேட்டபோது மொத்தம் ரூ.88 லட்சம் கொடுத்தால் பணிகளை முடிக்கிறேன் என கூறுகிறார். நான் கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதுகுறித்த புகாரின்பேரில், ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூன்குமார் கோவை லட்சுமி மில்ஸ் பாரதியார் ரோட்டை சேர்ந்த சிவபிரசாத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
The post நடிகர் பார்த்திபனிடம் ரூ.42 லட்சம் சுருட்டல்: கோவை ஸ்டூடியோ அதிபர் மீது வழக்கு appeared first on Dinakaran.