லாரி-பைக் மோதல்: காதல் ஜோடி பலி

களக்காடு: நெல்லை மாவட்டம், களக்காடு அருகே கடம்போடு வாழ்வு கிராமத்தை சேர்ந்தவர் சாலமன் (26). வள்ளியூரில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார். இவரும் அதே கடையில் வேலை செய்த ராதாபுரம் அருகே பழவூர் கிராமத்தைச் சேர்ந்த மதுமிதாவும் (19) காதலித்துள்ளனர். இந்நிலையில் நேற்று இருவரும் பைக்கில் நாங்குநேரி அருகே நம்பி நகர் பகுதிக்கு வந்துள்ளனர்.

பின்னர் இருவரும் வள்ளியூர் திரும்பி கொண்டிருந்தனர். நாங்குநேரி தாலுகா அலுவலகம் முன் நான்குவழிச் சாலையில் எதிரே கேரளவில் இருந்து மீன் கழிவுகளை ஏற்றிவந்த கன்டெய்னர் லாரி மீது பைக் பயங்கரமாக மோதியது. இதில் சாலமன், மதுமிதா இருவரும் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்கு பதிந்து லாரி டிரைவரான திருச்சூரைச் சேர்ந்த சேர்மன் (37) என்பவரை கைது செய்தனர்.

The post லாரி-பைக் மோதல்: காதல் ஜோடி பலி appeared first on Dinakaran.

Related Stories: