புதுச்சேரியில் பாக்கெட் சாராயம் வாங்கி குடித்த முதியவர் சாவு

திருவெண்ணெய்நல்லூர்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.குமாரமங்கலத்தை சேர்ந்தவர் முருகன் (61). புதுச்சேரி மாநிலம் மடுகரையில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரிடம் ஜெயராமன் (65), சிவசந்திரன் (46) ஆகியோர் தலா 50 ரூபாய் கொடுத்து மடுகரையில் விற்கும் பாக்கெட் சாராயம் வாங்கி வருமாறு கூறியுள்ளனர்.

அதன்படி வாங்கி வந்த பாக்கெட் சாராயத்தை மூவரும் கடந்த மாதம் 29ம் தேதி இரவு குடித்துள்ளனர். வீடு திரும்பிய ஜெயராமன் 30ம் தேதி காலை வெகுநேரமாகியும் எழுந்திருக்கவில்லை. உறவினர்கள் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலையடுத்து முருகன், சிவசந்திரன் ஆகியோரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் ஜெயராமன் நேற்று அதிகாலை இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து முருகனை கைது செய்தனர்.

The post புதுச்சேரியில் பாக்கெட் சாராயம் வாங்கி குடித்த முதியவர் சாவு appeared first on Dinakaran.

Related Stories: