மோசமான வானிலை காரணமாக கடந்த 3 நாட்களாக வெஸ்ட் இண்டீசிலேயே தங்கியிருந்த இந்திய அணியினர், நேற்று ஏர் இந்தியா சிறப்பு விமானத்தில் தாயகம் புறப்பட்டனர். இந்திய நேரப்படி இன்று காலை 6.20க்கு டெல்லி வரும் இந்திய வீரர்கள், பின்னர் காலை 11.00 மணியளவில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெறுகின்றர்.
அதன் பிறகு விமானம் மூலமாக மும்பை வரும் சாம்பியன்களுக்கு பிசிசிஐ சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. மாலை 5.00 மணிக்கு மெரைன் டிரைவ் பகுதியில் இருந்து வான்கடே ஸ்டேடியம் வரை திறந்த பேருந்தில் வெற்றி ஊர்வலம் நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு உலக சாம்பியன்களை வாழ்த்தி வரவேற்க உள்ளனர்.
The post உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம் appeared first on Dinakaran.