டெல்லி : மக்கள்கூடும் ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு, விதிமுறைகளை விதிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் கார்கே தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க உறுப்பினர்கள் பரிந்துரை வழக்க வேண்டும் என்றும் ஆசிரமங்கள் மூலம் மக்களை ஏமாற்றி கொள்ளை அடிப்பது தடுக்கப்பட வேண்டும் என்றும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். முன்னதாக உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் நேற்று ஆன்மிக சொற்பொழிவின்போது கூட்ட நெரிசலில் 108 பெண்கள் உள்பட 121 பேர் உயிரிழப்புக்கு மாநிலங்களவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
The post மக்கள்கூடும் ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு, விதிமுறைகளை விதிக்க வேண்டும் : மாநிலங்களவையில் கார்கே பேச்சு appeared first on Dinakaran.