என்றும் எப்போதும் தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் : தமிழ்நாடு அரசு புகழாரம்

சென்னை :என்றும் எப்போதும் தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று தமிழ்நாடு அரசு புகழாரம் சூட்டியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்,”சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பல அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார் முதலமைச்சர். ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் 10,000 கி.மீ. நீள கிராம சாலைகள் மேம்படுத்தப்படும் என்று முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். 75,000 இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள், ஒசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவித்தார். திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம், அறிவியல் மையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post என்றும் எப்போதும் தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் : தமிழ்நாடு அரசு புகழாரம் appeared first on Dinakaran.

Related Stories: