ஜெட் விமான சோதனை ஓட்டம்: மயிலாடுதுறையில் நில அதிர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஜெட் விமான சோதனை ஓட்டம் காரணமாக மயிலாடுதுறையில் நிலஅதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தஞ்சை விமான தளத்திலிருந்து மயிலாடுதுறை வழியாக ஜெட் விமானம் சோதனை ஓட்டம் நடந்தது. ஜெட் விமானம் தாழ்வாக பறக்கும்போது சில நேரங்களில் நிலஅதிர்வு ஏற்படும் என வல்லுநர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் நில அதிர்வு குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என மயிலாடுதுறை காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர்.

The post ஜெட் விமான சோதனை ஓட்டம்: மயிலாடுதுறையில் நில அதிர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: