இதற்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பிரியதர்ஷினி, இரவு உணவுக்கு பின்பு வழக்கம் போல் தனது அறைக்கு சென்றார். நேற்று நீண்டநேரமாகியும் கதவை திறக்காததால் பெற்றோர் திடுக்கிட்டனர். இதையடுத்து, அக்கம்-பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பிரியதர்ஷினி தூக்கில் தொங்குவதை கண்டு திடுக்கிட்டனர். உடனே, அவரை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
The post பெண் டாக்டர் தற்கொலை appeared first on Dinakaran.