முன்னதாக கடந்த 23ம் தேதி கிழக்கு சம்பாரண் மாவட்டம் கோரசஹான் பகுதியில் சிறிய பாலம் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதேபோல், 22ம் தேதி சிவான் மாவட்டத்தில் ஒரு பாலம் இடிந்து விழுந்தது. கடந்த 18ம் தேதி அராரியா மாவட்டத்தில் ரூ. 12 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 180 மீட்டர் நீளமுள்ள பாலம் இடிந்து விழுந்தது. மாநிலத்தில் அடிக்கடி நடக்கும் பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள், எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளன. கடந்த 10 நாட்களில் 4 பாலங்கள் இடிந்து விழுந்தது குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
The post பீகாரில் கொட்டும் கனமழையால் 10 நாளில் 4 பாலம் இடிந்து விழுந்தது: எதிர்கட்சிகள் கடும் கண்டனம் appeared first on Dinakaran.