கால்பந்து, கூடைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு

 

ஊட்டி, மே 17: கோடை கால கால்பந்து, கூடைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு பெற்றது. இதில், கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நீலகிரி மாவட்டம் ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம் மைதானத்தில் கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு விளையாட்டுப்போட்டிகளின் பயிற்சி முகாம் நடந்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கால்பந்து கூடைப் பந்து மற்றும் குத்துச்சண்டை போட்டிகளுக்கான பயிற்சிகள் நடந்து வந்தன.

இது தவிர பல்வேறு தடகள போட்டிகளின் பயிற்சி முகாமும் நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்த கோடை கால கால்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை மற்றும் தடகள பயிற்சி வகுப்பு நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சியில் மூத்த பயிற்சியாளர் ரோலா, மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா, மாவட்ட கூடைப்பந்து சங்க தலைவர் ரவிகுமார் ஆகியோர் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தினர்.

உடன் மாநில கூடைப்பந்து விளையாட்டு சங்க துணை தலைவர் மோகன்குமார், மாவட்ட கூடைப்பந்து விளையாட்டு சங்க துணைத்தலைவர் ராஜ்குமார், செயலாளர் விஸ்வநாதன், துணை செயலாளர்கள் விஜயகுமார், ரவி, தம்பி மற்றும் இதன் பயிற்சியாளர்கள் பலர் உள்ளனர்.

The post கால்பந்து, கூடைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: