அந்த வகையில் சென்னையில் இருந்து இன்று இரவு 7.09 மணி முதல் வானத்தில் 7 நிமிஷங்கள் வரை 400 கிமீ தூரத்தில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை வானில் வெறும் கண்களால் பார்க்க முடியும் என நாசா அறிவித்துள்ளது. சென்னை மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பார்க்க முடியும் என அதன் பட்டியலை நாசா வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் வானியல் ஆர்வலர்கள், மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் சர்வதேச விண்வெளி மையத்தை பார்க்க ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் சென்னை பெரியார் அறிவியல் மையம் போன்ற இடங்களில் இதனை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
The post சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்னையில் இருந்து இன்று இரவு வெறும் கண்களால் பார்க்க முடியும் : வானியல் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு!! appeared first on Dinakaran.