கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டதன் மூலம் இறுதியில் நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம்: டி.ராஜா

சென்னை: கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டதன் மூலம் இறுதியில் நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பு ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அமையும். ஒன்றிய அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை மக்கள் புரிந்துகொண்டு வருகிறார்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றிய பாஜக அரசுக்கு விழுந்த சவுக்கடி என்றும் டி.ராஜா கருத்து தெரிவித்தார்.

The post கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டதன் மூலம் இறுதியில் நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம்: டி.ராஜா appeared first on Dinakaran.

Related Stories: