இதைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “நான் எழுதித் தருகிறேன்; உத்தரபிரதேசத்தில் பாஜக கூட்டணி படுதோல்வி அடையும். நாடு முழுவதும் பாஜகவின் தோல்விக்கு உத்தரபிரதேசம் தான்வழிகாட்டப் போகிறது. உத்தரபிரதேசத்தில் I.N.D.I.A. கூட்டணி மற்றும் அகிலேஷ்யாதவுக்குதான் வெற்றி: தோல்வியில் இருந்து தன்னை காப்பாற்றுமாறு அம்பானி, அதானியிடம் மன்றாடுகிறார் மோடி. 10 ஆண்டுகளில் பல்வேறு மேடைகளில் பேசிய மோடி ,அம்பானி,அதானி பெயரை குறிப்பிடவில்லை. பயம் வரும்போது தன்னை யார் காப்பாற்றுவார்களோ அவர்களைப் பற்றி பேசுகிறார் மோடி. அதானி பணத்தை டெம்போவில் அனுப்புவதாக தனது சொந்த அனுபவத்தில் மோடி கூறுகிறார். 15 நாட்களுக்கு உங்கள் கவனத்தை திசைதிருப்ப மோடி, அமித்ஷா முயற்சிப்பார்கள்; உஷாராக இருங்கள்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post தோல்வியில் இருந்து தன்னை காப்பாற்றுமாறு அம்பானி, அதானியிடம் மன்றாடுகிறார் மோடி : உ.பி.யில் ராகுல், அகிலேஷ் கூட்டாக பிரச்சாரம் appeared first on Dinakaran.