இவர் பீகாரில் பல்வேறு இடங்களில் இருந்து தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த 20 மாணவர்களை இரண்டு கார்களில் அழைத்து வந்து மே 4ம் தேதி பாட்னா புறவழிச்சாலையில் உள்ள ராமகிருஷ்ண நகர் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கவைத்துள்ளார். தேர்வுக்கு முந்தைய நாள் 20 தேர்வர்களுக்கு விடையுடன் கூடிய நீட் வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. குற்றம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து 20 தேர்வர்களையும் அழைத்து வர பயன்படுத்தப்பட்ட 2 கார்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் யாதவேந்து என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர், யாதவேந்துவுக்கு யார் யாருடன் தொடர்பு இருக்கிறது என்பது குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக 4 மாணவர்களும், அவர்களது பெற்றோர்கள் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
The post ஒன்றிய அரசு நடத்தும் நீட் தேர்வில் அடுத்தடுத்த முறைகேடுகள் : பீகாரில் 20 மாணவர்களுக்கு முன்கூட்டியே விடையுடன் கூடிய வினாத்தாள் கொடுத்தது அம்பலம்!! appeared first on Dinakaran.