சிறப்பு அழைப்பாளர்களாக மாநில மகளிரணி துணை அமைப்பாளர் விஜிலா சத்யானந்த், தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராணி குமார் ஆகியோர் பங்கேற்று பெண் காவலர்கள், காவல்துறை உயர் அதிகாரிகளை அவதூறாக பேசிய சவுக்கு சங்கரை கண்டித்து அவர் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். தொடர்ந்து அவருக்கு எதிராக கண்டன கோசங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி, மகளிரணி உறுப்பினர்கள் பொன்னு துரைச்சி, விஜயலட்சுமி, சுப்புத்தாய், கவிதா, கற்பகம், பெருமாள் மாரிசெல்வம், நகர்மன்ற உறுப்பினர்கள் அருணாதேவி, தங்கம், நகர அவைத்தலைவர் வேல்சாமி பாண்டியன், நகர செயலாளர் அந்தோணிசாமி, பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் சாகுல்ஹமீது, நிர்வாகிகள் ராஜ்காந்த், ராஜவேல் பாண்டியன், சதீஷ், ஆறுமுகம், சுப்பு, அன்புராஜன் மற்றும் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். மாவட்ட துணைச்செயலாளர் புனிதா நன்றி
தெரிவித்தார்.
The post பெண்களை அவதூறாக பேசிய யூடியூபர் சங்கரை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.