அட்சய திருதியை இன்று கொண்டாடப்படும் நிலையில் ஷாக் கொடுத்த தங்கம் விலை; சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.53,280க்கு விற்பனை

சென்னை: அட்சய திருதியை இன்று கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.53,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,660க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.30 உயர்ந்து ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று அட்சய திருதியை முன்னிட்டு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,920-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,615-க்கு விற்பனையானது. இன்றைய (மே 10) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.53,820-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,660-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,130ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.57,040-ஆக விற்பனையாகிறது. வெள்ளி விலை 1.30 காசுகள் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.90.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

The post அட்சய திருதியை இன்று கொண்டாடப்படும் நிலையில் ஷாக் கொடுத்த தங்கம் விலை; சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.53,280க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: