அபாயகரமான மலைப்பாதையில், சுமார் அரை கி.மீ., தொலைவிற்கு பஸ்சை பின்னோக்கி மிகவும் சாமர்த்தியமாக ஓட்டினார். அந்த யானையும் விடாமல் பஸ்சை துரத்தி வந்ததால், பயணிகள் கத்தி கூச்சலிட்டனர். ஒரு கட்டத்தில் சாமி ஏரி குறுக்கிட்டது. ஏரியில் தண்ணீரை பார்த்ததும், அந்த யானையின் கவனம் திசை திரும்பியது. பின்னர், பஸ்சை துரத்திய களைப்பில், தாக சாந்திக்காக ஏரியை நோக்கி ஓட்டம் பிடித்தது. இதனால், பஸ்சில் இருந்தவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதனை தொடர்ந்து, கியர் மாற்றி மின்னல் வேகத்தில் பெட்டமுகிலாளம் மலை கிராமம் நோக்கி, டிரைவர் பஸ்சை ஓட்டிச் சென்றார். இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post அரசு பஸ்சை துரத்திய காட்டுயானை மலைபாதையில் பின்னோக்கி ஓட்டி பயணிகளை காப்பாற்றிய டிரைவர்: வீடியோ வைரல் appeared first on Dinakaran.