தமிழ்நாட்டில் சில இடங்களில் 5 நாட்களுக்கு லேசான மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தென்னிந்திய பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு சில இடங்களில் லேசானது முதல் மிதமான வரையிலான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தென்பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் நேற்று மழை பெய்துள்ளது. கொள்ளிடம் பகுதியில் 70 மிமீ மழை பெய்துள்ளது. கடலூர், மதுரை 50 மிமீ மழை பெய்துள்ளது. மேலும் திருவண்ணாமலை, திருநெல்வேலி, சிதம்பரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருவாரூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது.

வட தமிழகத்தில் உள் மாவட்டங்களில் சில இடங்களிலும், சென்னை மற்றும் புறநகரில் சில இடங்களிலும் லேசான மழை பெய்துள்ளது. இருப்பினும் தமிழகத்தின் உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் அனேக இடங்களில் பொதுவாக இயல்பைவிட வெப்ப நிலை அதிகமாகவும், ஓரிரு இடங்களில் இயல்பைவிட மிக அதிகமாகவும் இருந்தது.அதன் அடிப்படையில் அதிகபட்சமாக கரூர் பரமத்தி, ஈரோடு மாவட்டங்களில் நேற்று 108 டிகிரி வெயில் நிலவியது. நாமக்கல் 104 டிகிரி, மதுரை, சேலம், திருச்சி 102 டிகிரி, திருத்தணி, பாளையங்கோட்டை, கோவை 100 டிகிரி, சென்னை, தர்மபுரி 99 டிகிரி வெயில் இருந்தது.

இந்நிலையில் தென்இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். 12ம் தேதி கோவை மாவட்டத்தின் மலை மாவட்ட பகுதிகள், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 13, 14ம் தேதிகளிலும் அதே நிலை நீடிக்கும்.

The post தமிழ்நாட்டில் சில இடங்களில் 5 நாட்களுக்கு லேசான மழை: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: