இந்நிலையில், வரும் 16ம் தேதி வரை தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் 96.8 முதல் 104 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே தமிழ்நாட்டில் பெரும்பான்மையான இடங்களில் கடுமையான வெப்பமும், வெப்ப அலைக்கு நிகரான பருவநிலையும் நிலவி வருவதால், பொதுமக்கள் வெப்பம் சார்ந்த நோய்களால் பாதிக்கக்கூடிய சூழ்நிலை உள்ளது. வெப்ப அலையின் தாக்கத்தில் இருந்து சிறுவர், சிறுமியரின் நலனை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் கருதி, கோடை விடுமுறை நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் எல்லா வகையான பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை தவிர்த்திட வேண்டும். இதனை உறுதி செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
The post வெப்ப அலை வீசுவதால் மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது: பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை appeared first on Dinakaran.