தோல்வி பயம் காரணமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாடகத்தை பிரதமர் மோடி அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார். இந்திய பிரதமர் என்ற நிலையில், இருந்து தரம் தாழ்ந்து பேசுகிறார் மோடி. இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்த உடன் 30 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.ஆகஸ்ட் 15 ம் தேதிக்குள் ஆட்சேர்ப்புப் பணிகளைத் துவங்குவோம். பணமதிப்பிழப்பு, தவறான வரி நடைமுறைகளை பிரதமர் மோடி புகுத்தினார். 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என பிரதமர் மோடி கூறியது பொய்யானது. நாங்கள் சொல்வதைக் கேளுங்கள், வெறுக்காதீர்கள், ஒரு வேலையைத் தேர்ந்தெடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
The post I.N.D.I.A. கூட்டணி மீது நம்பிக்கை வைத்து வேலைவாய்ப்பை இளைஞர்கள் தேடிக்கொள்ள வேண்டும் : ராகுல் காந்தி வலியுறுத்தல் appeared first on Dinakaran.