சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழப்பு 9ஆக உயர்வு..!!

சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழப்பு 9ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 அறைகள் தரைமட்டமாகின. பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர், வருவாய்த்துறை, தீயணைப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தோர் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழப்பு 9ஆக உயர்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: