நிலக்கோட்டை அருகே பயம் வர வேண்டும் என்பதற்காக கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது..!!

திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே பயம் வர வேண்டும் என்பதற்காக கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். நடுப்பட்டியைச் சேர்ந்த ஆண்டார் 2 நாட்களுக்கு முன்பு வீட்டு வாயிலில் தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கொலை சம்பவத்தில் தொடர்புடைய கரியாம்பட்டியை சேர்ந்த ஆறு பேரை கைது செய்தனர். பஞ்சாயத்து செய்யும் போது எதிர்த்துப் பேசக்கூடாது, ஒரு பயம் வர வேண்டும் என்பதற்காக கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

The post நிலக்கோட்டை அருகே பயம் வர வேண்டும் என்பதற்காக கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: