ஐஎப்எஸ் இறுதி தேர்வு முடிவு வெளியீடு: இந்திய அளவில் 147 பேர் தேர்ச்சி

* தமிழ்நாட்டில் 9 பேர் வெற்றி பெற்று சாதனை
* மாதவரம் மாணவர் ஜத்தின் பாபு முதல் இடத்தை பிடித்தார்

சென்னை: ஐஎப்எஸ் தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இந்திய அளவில் 147 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 9 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தில் மாதவரத்தை சேர்ந்த மாணவர் ஜத்தின் பாபு முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் ஐஎப்எஸ் (இந்திய வனப்பணி) பணிக்கான சிவில் சர்வீஸ் தேர்வை நடத்துகிறது. இந்த ஆண்டு (2023ம் ஆண்டுக்கானது) 150 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டது. முதலில் முதல்நிலை தேர்வு எழுத்து நடத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் 26 முதல் டிசம்பர் 3ம் தேதி வரை மெயின் தேர்வு நடத்தப்பட்டது. மெயின்தேர்வை தொடர்ந்து இந்தாண்டு ஜனவரி மாதம் 13ம் தேதி மெயின் தேர்வுக்கான ரிசல்ட் ெவளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த ஏப்ரல் 22ம் தேதி முதல் மே 1ம் தேதி வரை நேர்காணல் நடைபெற்றது.

இந்த நிலையில் நேர்முக தேர்வு முடிந்து நேற்று யுபிஎஸ்சி தனது இணையதளத்தில் இறுதி தேர்வு முடிவை வெளியிட்டது. இதில், இந்தியா முழுவதும் 147 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 9 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இது குறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் வைஷ்ணவி சங்கர் கூறியதாவது: ஐஎப்எஸ் தேர்வுக்கான நேர்காணல் முடிவடைந்ததையடுத்து இறுதி தேர்வு முடிவை யுபிஎஸ்சி தனது இணையதளமான www.upsc.gov.in வெளியிட்டது. இந்திய அளவில் 147 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 9 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். தேர்ச்சி பெற்ற 147 பேரில் 102 பேர் சங்கர் ஐஏஎஸ் அகடாமி மாணவர்கள். சென்னை, டெல்லி, பெங்களூர், திருவனந்தபுரம் மையங்களில் படித்தவர்கள். முதல் 10 இடங்களில் 8 இடங்களை எங்கள் மாணவர்கள் கைப்பற்றி உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 9 மாணவர்கள் மட்டும் வெற்றி பெற்றுள்ளனர்.

இவர்கள் அனைவரும் எங்கள் அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர். காலே பிரதிக்க்ஷா அகில இந்தியளவில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் மில் காலனியை சேர்ந்த ஜத்தின் பாபு முதல் இடத்தை பெற்றுள்ளார். இவர் அகில இந்திய அளவில் 27வது இடம் பிடித்துள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த கோபில்லா கிருஷ்ண வட்சவ்வா அகில இந்திய அளவில் 51வது இடமும், செல்வி அஸ்வினி அகில இந்திய அளவில் 115வது இடமும் பிடித்துள்ளனர். இந்த இருவரும் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு எழுதி குடிமைப்பணி தேர்வு மற்றும் வனப்பணித் தேர்வு இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளனர். எங்கள் அகடாமி கடந்த 11 ஆண்டுகளாக இந்திய வனப்பணிக்கான தேர்வு முடிவுகளில் தொடர்ந்து முதல் இடத்தை பெற்றுள்ளது.

இந்த 11 ஆண்டுகளில் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் பயிற்சி பெற்று 479 மாணவர்கள் வெற்றிகரமாக இந்திய வனப்பணியில் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு டேராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன பயிற்சி மையத்தில் பயிற்சி வழங்கப்படும். சுமார் ஒன்றரை ஆண்டுகள் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அதை தொடர்ந்து பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு அவர்கள் பணியில் சேருவார்கள். இவ்வாறு வைஷ்ணவி சங்கர் கூறினார்.

The post ஐஎப்எஸ் இறுதி தேர்வு முடிவு வெளியீடு: இந்திய அளவில் 147 பேர் தேர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: