மானாமதுரை அருகே பொக்லைன் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயம்

சிவகங்கை: மானாமதுரை அருகே பொக்லைன் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 15 பேர் காயமடைந்தனர். மதுரையிலிருந்து ராமநாதபுரம் செல்வதற்காக வந்த அரசு விரைவு பேருந்து, மதுரை பேருந்து நிலையத்தில் சில பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் பரமக்குடி வழியே ராமநாதபுரம் நோக்கி சென்றுள்ளது.

பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் மேலப்பசலை கிராமம் அருகே ஒரு பொக்லைன் இயந்திரம் வேலையை முடித்துவிட்டு சாலையை கடக்க முற்பட்டுள்ளது. அப்போது வேகமாக வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக பொக்லைன் இயந்திரத்தின் முன் பகுதியில் மோதியது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 15க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயம் ஏற்பட்டு மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மானாமதுரை அருகே பொக்லைன் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: