கோடை மழை வருமா..? என தினசரி எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுவதால் மக்கள் சற்று நிம்மதியடைந்தனர். ஆனால் தலைநகர் சென்னையில் மழைக்கான அறிகுறியே இல்லாமல் இருந்தது. ஆனால் இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வழக்கத்தை விட அதிகமாக வீசி வந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் திடீரென மழை பெய்தது. இது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. சென்னையில் மயிலாப்பூர், சைதாப்பேட்டை, கிண்டி, ஆலந்தூர், மீனம்பாக்கம் விமான நிலையம், அடையார், வேளச்சேரி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வடபழனி, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், ஆயிரம் விளக்கு, நந்தனம் ஆகிய இடங்களில் நல்ல மழை பெய்தது. ஆனால் 15 நிமிடங்கள் மட்டுமே மழை நீடித்தது. இருந்தாலும் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் சற்று நிம்மதியடைந்தனர்.
The post சுட்டெரித்த வெயிலுக்கு இடையே சென்னையில் திடீர் மழை appeared first on Dinakaran.