தேர்தலுக்காக பொய் பிரச்சாரம்!: கச்சத்தீவு விவகாரத்தில் இல்லாத அதிகாரி பெயரில் போலி ஆவணம் வெளியிட்டு சதி?..பாஜக மீது வழக்கு தொடர காங். முடிவு..!!

சென்னை: கச்சத்தீவு விவகாரத்தில் இல்லாத அதிகாரி பெயரில் போலி ஆவணம் வெளியிட்டு பாஜக சதி செய்துள்ளதாக காங்கிரஸ் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளது.

கச்சத்தீவு விவகாரம்-பாஜக வெளியிட்டது போலி ஆவணம்?:

கச்சத்தீவு விவகாரத்தில் ஆர்.டி.ஐ. மூலம் பெற்றதாக பாஜக வெளியிட்டவை போலி ஆவணங்கள் என்று பரபரப்பு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது தொடர்பாக வெளியுறவுத்துறை தந்த ஆவணத்தில் அஜய் ஜெயின் என்பவர் கையெழுத்திட்டுள்ளார்.

இல்லாத அதிகாரி பெயரில் ஆவணம் வெளியிட்டு பாஜக மோசடி?

ஆவணத்தில் கையெழுத்திட்ட அஜய் ஜெயின் பெயரில் வெளியுறவு அமைச்சகத்தில் எந்த அதிகாரியும் இல்லை என்பது அம்பலமாகியுள்ளது. ஆர்.டி.ஐ. மூலம் கேட்ட கேள்விக்கு அஜய் ஜெயின் என்ற
அதிகாரியே வெளியுறவுத்துறையில் இல்லை என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

கச்சத்தீவு – பெரிதுபடுத்திய பாஜக சதி அம்பலம்!:

ஒன்றிய அரசு பதில் மூலம் கச்சத்தீவு விவகாரத்தில் பா.ஜ.க.வின் மோசடி அம்பலமாகியிருக்கிறது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ஆர்.டி.ஐ.யின் மூலம் அம்பலமான பா.ஜ.க.வின் சதிவேலை?:

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கு முன் கச்சத்தீவு விவகாரத்தை பெரிதுபடுத்தி வாக்குகளை பெற பா.ஜ.க. முயற்சித்தது. பிரதமர் மோடி முதல் ஒன்றிய அமைச்சர்கள் வரை கச்சத்தீவு விவகாரத்தில் பொய் பேசியதும் அம்பலமாகியிருப்பதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

கச்சத்தீவு – பாஜக மீது வழக்கு தொடர காங். முடிவு:

கச்சத்தீவு விவகாரத்தை பெரிதுபடுத்து பா.ஜ.க. செய்த முறைகேடுகள் குறித்து நீதிமன்றத்தில் முறையிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

தேர்தலுக்காக பா.ஜ.க. பொய் பிரச்சாரம்: காங்கிரஸ்

தமிழ்நாட்டில் தேர்தலுக்கு 3 வாரம் முன் கச்சத்தீவு ஆவணங்களை அண்ணாமலை வெளியிட்டார். ஆர்.டி.ஐ. மூலம் பெறப்பட்டதாக கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ், திமுகவுக்கு எதிராக பா.ஜ.க. பிரச்சாரம் செய்தது. மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் கச்சத்தீவு பற்றி பிரச்சாரத்தில் பேசினர். கச்சத்தீவு குறித்து பொய் பிரச்சாரம் செய்த மோடி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். அண்ணாமலை வெளியிட்ட ஆர்.டி.ஐ. ஆவணத்தில் கையெழுத்திட்ட அஜய் ஜெயின் வெளியுறவு துறையில் இல்லை என்பதால் மோசடி அம்பலமாகியுள்ளது.

The post தேர்தலுக்காக பொய் பிரச்சாரம்!: கச்சத்தீவு விவகாரத்தில் இல்லாத அதிகாரி பெயரில் போலி ஆவணம் வெளியிட்டு சதி?..பாஜக மீது வழக்கு தொடர காங். முடிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: