வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த அறிவுறுத்தல் : தேர்தல் ஆணையம்

சென்னை : வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது. பாதுகாப்பு அறைகளில் சிசிடிவிக்கள் செயலிழந்தது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. தேர்தல் ஆணைய விளக்கத்தை அடுத்து எம்.எல்.ரவி என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

The post வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த அறிவுறுத்தல் : தேர்தல் ஆணையம் appeared first on Dinakaran.

Related Stories: