இதனிடையே அக்ஷய திருதியை வருகிற 10ம் தேதி வருகிறது. அன்றைய தினம் தங்கம் வாங்கினால் வருடம் முழுவதும் தங்கம் வாங்குவார்கள் என கூறப்படுகிறது. இதனால் பெண்கள் அக்ஷய திருதியை நாளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,630-க்கு விற்கப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.88.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
The post சற்றே குறைந்த தங்கம் விலை; சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,040க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.