கிண்ணங்கள் மாநிலம் முழுவதும் கிடைக்கின்றன, தேவைப்படுபவர்கள் தமிழ்நாடு விலங்குகள் நல வாரிய இன்ஸ்டாகிராம் பக்கத்தை அணுகலாம். கிண்ணங்களை பெறுபவர்கள் சரியான நேரத்தில் தண்ணீரை மாற்ற வேண்டும், அவர்களே கிண்ணங்களை சுத்தம் செய்ய வேண்டும். புளூ கிராஸ் ஆப் இந்தியா நிறுவனம் 700க்கும் மேற்பட்ட சிமென்ட் தண்ணீர் கிண்ணங்களை நகரில் விநியோகித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், 3,000 முதல் 4,000 கிண்ணங்களை புளூ கிரால் விநியோகிக்கிறது, இந்த முறை காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மக்கள் கிண்ணங்களை சேகரித்துள்ளனர். மேலும் ஊழியர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் இந்த கிண்ணங்களை வைக்குமாறு தனியார் நிறுவனங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மாமல்லபுரம் மற்றும் படூரில் உள்ள அறம் செய்வோம் அறக்கட்டளை நாவலூர், சிறுசேரி, கழிப்பட்டு, படூர் மற்றும் கேளம்பாக்கம் ஆகிய இடங்களில் தண்ணீர் தொட்டிகளை வைப்பதோடு, மரங்களிலும் தண்ணீர் கிண்ணங்களை அமைக்கிறது. பெரிய செவ்வக வடிவ சிமென்ட் கிண்ணங்கள் நாய்கள், பூனைகள் மற்றும் மாடுகளுக்கானவை, மேலும் அவை 20 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இவற்றில் விலங்குகளுக்கான தண்ணீர் கிண்ணங்களில், அகற்ற வேண்டாம் என ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதப்பட்ட பலகை பொருத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post விலங்குகள் நல வாரியம் நடவடிக்கை: தெரு விலங்குகளின் தாகம் தீர்க்க தண்ணீர் கிண்ணங்கள் அமைப்பு appeared first on Dinakaran.