பாதி தூரம் சென்றதும் மேற்கொண்டு அவரால் நீந்த முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரில் மூழ்க தொடங்கினார். அவர், தண்ணீரில் மூழ்கி தத்தளிப்பதை கண்ட அவரது நண்பர்கள், கரையிலிருந்து கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தாம்பரம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 1 மணி நேரம் போராடி, செல்வகணபதி உடலை மீட்டனர். சங்கர் நகர் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் கல்குவாரி குட்டையில் குளித்த பெயின்டர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோடைகாலம் வந்தாலே இதுபோன்ற கல்குவாரி குட்டை மரணங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க இது போன்ற திறந்த நிலையில் உள்ள கல்குவாரி குட்டைகளை சுற்றிலும் இரும்பு கம்பிகள் கொண்டு தடுப்புகள் அமைத்து, ஆபத்து குறித்த எச்சரிக்கை விளம்பர பலகைகள் வைத்து, பெருகி வரும் உயிரிழப்பை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மறு கரைக்கு நீந்தி செல்வதாக நண்பர்களிடம் சவால்: கல்குவாரி குட்டையில் மூழ்கி பெயின்டர் பரிதாப பலி appeared first on Dinakaran.