பீடி புகைத்துக் கொண்டிருந்தபோது லுங்கியில் தீ பற்றியதில் முதியவர் பரிதாப பலி

திருவள்ளூர்: திருவள்ளூரில் பீடி புகைத்துக் கொண்டிருந்தபோது லுங்கியில் தீ பற்றியதால் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் ராஜாஜிபுரம் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார் (49). இவரது தந்தை ரங்கராஜன் (78). இவர் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மே 1ம் தேதி முதியவர் ரங்கராஜன் பீடி புகைத்துக் கொண்டு இருந்தார். அப்போது பீடியின் நெருப்பு லுங்கியில் பட்டு தீப்பற்றி எரிந்தது. இதில் ரங்கராஜனின் இடுப்பின் கீழ் இரண்டு கால்கள் மற்றும் இடுப்பின் பின்புறத்தில் தீக்காயம் ஏற்பட்டது. இதனையடுத்து மகன் சிவக்குமார் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு தந்தை ரங்கராஜனை அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கு முதல் சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ரங்கராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பீடி புகைத்துக் கொண்டிருந்தபோது லுங்கியில் தீ பற்றியதில் முதியவர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: