3-ம் கட்டமாக 93 தொகுதிகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

டெல்லி: 3-ம் கட்டமாக குஜராத், கர்நாடகா, மராட்டியம் உள்பட 11 மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 6 மணிக்குள் வாக்குசாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

3-ம் கட்ட தேர்தல் நடைபெறும் 93 தொகுதிகளில் 1,351 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காந்திநகரில் அமித்ஷா, விதிஷா தொகுதியில் சிவ்ராஜ் சிங் சவுகான், குணா தொகுதியில் ஜோதிராதித்ய சிந்தியா, ஹவேரி தொகுதியில் பசவராஜ் பொம்மை, துப்ரி தொகுதியில் பத்ருதீன் அஜ்மல் ஆகியோர் போட்டியிட்டனர்.

The post 3-ம் கட்டமாக 93 தொகுதிகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: