சென்னை கடற்கரை – செங்கல்பட்டு ரயில் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும்: தெற்கு ரயில்வே!

சென்னை: இன்றிரவு 8.35-க்கு புறப்படும் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு ரயில் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றிரவு 10.05-க்கு புறப்படும் சென்னை கடற்கரை செங்கல்பட்டு ரயிலும் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கத்தில் செங்கல்பட்டுக்கு பதில் மின்சார ரயில் இரவு 11 மணிக்கு சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும். காட்பாடி – ஜோலார்பேட்டை சிறப்பு ரயில் மே 8, 10 தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

The post சென்னை கடற்கரை – செங்கல்பட்டு ரயில் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும்: தெற்கு ரயில்வே! appeared first on Dinakaran.

Related Stories: