இனி வரும் காலங்களில் வேகத்தடைகளுக்கு சற்று தள்ளி பாதுகாப்பான முறையில் மின்கம்பங்களை அமைக்க மின்வாரியம் உத்தரவு

சென்னை: இனி வரும் காலங்களில் சாலையோரம் வேகத்தடை அருகே மின்கம்பங்கள் அமைக்காமல் சற்று தள்ளி அமைக்க வேண்டும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. வேகத்தடைகளுக்கு சற்று தள்ளி பாதுகாப்பான முறையில் மின்கம்பங்களை அமைக்க மின்வாரியம் உத்தரவு அளித்துள்ளது. மின்கம்பங்களால் தொடர் விபத்து நடைபெறுவதை அடுத்து மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. பழுதடைந்த மின்கம்பங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

The post இனி வரும் காலங்களில் வேகத்தடைகளுக்கு சற்று தள்ளி பாதுகாப்பான முறையில் மின்கம்பங்களை அமைக்க மின்வாரியம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: