சீரான மின்சாரம் வழங்க கோரி பெண்கள் மனு

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் ஆற்காடுகுப்பம் ஊராட்சி பங்களாமேடு கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 3 நாட்களாக குறைந்தழுத்த மின் விநியோம் செய்யப்படுவதாகவும், இதனால் மின்சாதன பொருட்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கோடை வெயில் கொளுத்தி வருவதால், குழந்தைகள், முதியோர் அவதிப்படுவதாகவும், குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று கனகம்மாச்சத்திரம் மின்வாரிய அலுவலகத்தில், இளநிலை பொறியாளர் எழிலரசனை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். ஓரிரு நாட்களில் மின்சார பிரச்னை தீர்க்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். இதனையடுத்து பெண்கள் அனைவரும் திரும்பிச் சென்றனர்.

The post சீரான மின்சாரம் வழங்க கோரி பெண்கள் மனு appeared first on Dinakaran.

Related Stories: