விழாவில், முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். காப்பு கட்டிய பக்தர்கள் மாலை கிராம வீதிகளில் ஊர்வலமாக கோயில் வந்து, அக்னி குண்டத்திற்கு முன்பு திரவுபதி அம்மன் எழுந்தருள, அக்னி குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி பரவசத்துடன் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில், அத்திமாஞ்சேரி, வனதுர்காபுரம் கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
The post திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா appeared first on Dinakaran.