தேசிய பாய் மர படகு போட்டி: ஆவடி மத்திய ரிசர்வ் காவல் படையினருக்கு முதல் பரிசு

ஆவடி: ஆவடி மத்திய ரிசர்வ் காவல் படை காவலர்கள் தேசிய அளவிலான பாய் மர படகு போட்டி முதல் பரிசு பெற்றனர். தேசிய அளவிலான பாய் மர படகு போட்டி சென்னை துறைமுகத்தில் அமைந்துள்ள ஆர்எம்ஒய்சி ராயல் மெட்ராஸ் கிளப்பில் கடந்த மே 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடைபெற்றது. இதில் தேசிய அளவிலான மத்திய ரிசர்வ் காவல் படை, விமானப்படை, கப்பற்படை, தரைப்படை பல்வேறு அணிகள் கலந்து கொண்டது. இதில் மத்திய ரிசர்வ் காவல் படை பணி முதல் பரிசை பெற்றது.

இதற்கான பரிசளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக மத்திய துணை ராணுவ படை சேர்ந்த தெற்கு பிராந்தியம் மத்திய காவல்துறை கூடுதல் இயக்குனர் ரவி தீப் சாய் பயிற்சி மைதான மையத்தின் வெற்றி பெற்ற ஆவடி மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்களுக்கு பரிசினை வழங்கினார். நிகழ்ச்சியில் மத்திய காவல்துறை தலைவர் சசிகாந்த் உபாத்யா, மத்திய காவல்துறை துணை தலைவர் எம்.தினகரன், கமாண்டோ நர்வீர்சிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post தேசிய பாய் மர படகு போட்டி: ஆவடி மத்திய ரிசர்வ் காவல் படையினருக்கு முதல் பரிசு appeared first on Dinakaran.

Related Stories: