இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் நடத்த 1979 முதல் முயற்சிகள் எடுக்கப்பட்டது. அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்த போதும் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் குழு ஒத்துழைப்பு வழங்குவதில்லை. பிரமோற்சவம் நடத்துவதை தொடர்ந்து தடுத்து வருகிறார்கள். தற்போது, மே 25 முதல் 29ம் தேதி வரை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் நடத்த தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை பக்தர்களும், அறங்காவலர்களும் ஏற்றுள்ளனர். எனவே, பிரமோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு சிறப்பு அமர்வில் வரும் 10ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
The post சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் நடத்துவதை பொது தீட்சிதர்கள் தடுக்கிறார்கள்: உயர் நீதிமன்றத்தில் செயல் அறங்காவலர் பதில் மனு appeared first on Dinakaran.